ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

Estimated read time 0 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வார விடுமுறை நாட்களில் குறைந்திருந்த பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக சபரிமலையில் பக்தர்களின் வருகை குறைந்திருந்தது.

குறிப்பாக கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி வரை 61 ஆயிரத்து 190 பேரும், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை 50 ஆயிரத்து 264 பேரும் மட்டுமே தரிசனம் செய்தனர்.

இது 15 நாள் மண்டல பூஜை காலத்தில் மிக குறைந்த வருகை பதிவான நாளாக அமைந்தது. இந்நிலையில், திங்கட்கிழமையன்று இரவு 7 மணி நிலவரப்படி 80 ஆயிரத்து 328 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

குறிப்பாக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டதிலிருந்து 16வது நாளான நேற்று வரை மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 388 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்

Please follow and like us:

You May Also Like

More From Author