ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.
அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்த உளவுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
மோதலின் போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் திறம்பட பதிலடி கொடுத்ததில், ஒரு பயங்கரவாதி உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
