கடந்த வாரம் ஓராண்டின் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, தற்பொழுது மீண்டும் சரிவிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, மே 29 உடன் முடிந்த வாரத்தில் நாட்டின் செலாவணி இருப்பு $938 மில்லியன் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதுகாப்புப் பெட்டகத்தின் மதிப்பு $682.32 பில்லியனாக உயர்ந்துள்ள நிலையில், இது அடுத்த 11 மாத கால இறக்குமதிச் செலவுகளுக்குப் போதுமானது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ஒரே வாரத்தில் உயர்ந்த இந்தியாவின் ‘ஃபாரெக்ஸ்’ இருப்பு! டாலர் மதிப்பில் ரிசர்வ் வங்கி கொடுத்த மாஸ் அப்டேட்!
