மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு ஒரு பேரல் 85 முதல் 90 டாலராக இருந்த எரிபொருள் விலை, தற்போது 150 முதல் 200 டாலர் வரை எகிறியுள்ளது.
விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் கால் பங்கு எரிபொருளுக்கே செலவிடப்படுவதால், இந்த விலை உயர்வு நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை உயர்த்துவதுடன், கூடுதல் எரிபொருள் கட்டணங்களையும் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களின் புதிய எரிபொருள் கட்டண விபரம்
