சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமை அமைச்சருமான டிங் சுய்சியாங், ஏப்ரல் 15 முதல் 17ஆம் நாள் வரை துருக்மேனிஸ்தானில் பயணம் மேற்கொண்டார். துருக்மேனிஸ்தானிலுள்ள சீரமைப்பு இயற்கை எரிவாயு வயலின் 4ஆவது கட்ட திட்டப்பணியின் துவக்க விழாவில் கலந்துகொண்டு, அந்நாட்டு தேசிய தலைவரும், மக்கள் ஆணையத்தின் தலைவருமான குர்பாங்குலி பெர்திமுகாமேதோவையும் அரசுத் தலைவர் ஷெர்தார் பெர்டிமுஹமடோவையும் சந்தித்து, துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான மேலியடோவுடன் இணைந்து, சீன-துருக்மேனிஸ்தான் ஒத்துழைப்பு ஆணையத்தின் 7ஆவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
இப்பயணத்தில் டிங் சுய்சியாங் கூறுகையில்,
இரு நாட்டு தலைவர்களின் எதிர்பார்ப்பையும் இரு நாட்டு மக்களின் கூட்டு விருப்பத்தையும் இத்திட்டப்பணி ஏற்றுகொள்கின்றது. இருதரப்பு எரியாற்றல் ஒத்துழைப்பை இது முன்னேற்றும். நாட்டின் சுதந்திரம், இறையாண்மை, உரிமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் சீனா துருக்மேனிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருகின்றது. சீனாவுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளில் துருக்மேனிஸ்தானின் ஆதரவை சீனா எதிர்பார்க்கின்றது என்றார்.
