“டெல்லிக்குத் தலைவணங்காத ஸ்டாலின்” – காங்கிரஸ் தலைவர் கார்கே கொடுத்த மரண மாஸ் சர்டிபிகேட்….!! 

Estimated read time 0 min read

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு எப்போதும் தலைவணங்காத ஒரு துணிச்சலான தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார். தென்மாநிலங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மசோதாவைத் தீயிட்டுக் கொளுத்தியவர் ஸ்டாலின் என்றும், மாநில உரிமைகளுக்காகப் போராடும் இவரைப் போன்ற தலைவர்கள்தான் தற்போது நாட்டுக்குத் தேவை என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டபோது, அதற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின்தான் என்று கார்கே குறிப்பிட்டார். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாப்பதிலும், மாநிலங்களின் குரலை டெல்லிக்குக் கொண்டு செல்வதிலும் ஸ்டாலின் முன்னோடியாகத் திகழ்வதாக அவர் தனது உரையில் பாராட்டியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author