இவ்வாண்டு, 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்க ஆண்டாகும். இவ்வாண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியுள்ள சரியான நிர்வாக செயற்திறன் என்ற தலைப்பிலான கல்வி நடவடிக்கை, சர்வதேச அளவில் மாபெரும் ஈர்ப்பைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த லியென்ஹசாவ்போ எனும் நாளேடு இது குறித்து வெளியிட்ட தொடர்புடைய கட்டுரையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அளவுக்கு மீறி நடைபோடாமல் இருப்பது என்பது, சீன அரசின் சாதனை கண்ணோட்டத்தின் முக்கிய மாற்றமாகும் எனத் தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்தின் வாராந்திர பிளிட்ஸ் நாளேடு வெளியிட்ட கட்டுரை ஒன்றில், சீனாவின் ஆட்சிமுறை கட்டமைப்பில் அந்நாட்டின் நீண்டகாலத் திட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தில் சீனாவின் முக்கிய நெடுநோக்குத் திட்டம் தெளிவாக வகுக்கப்பட்டது. இதனால், சீனா தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிப்படுத்தி வருகின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.
