ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் தனது தூதர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்காக இன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
“18 மணிநேரம் பயணம் செய்து, ஒன்றுமில்லாமல் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை” என்று டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் உடனான நேர்காணலில் தனது முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்குச் செல்லவிருந்த அமெரிக்க தூதர்களின் பயணம் ரத்து: டொனால்ட் டிரம்ப் அதிரடி
