ஆர்க்டிக் பனி உருகுவதால் காலநிலை மாற்றங்கள்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்  

ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம், உலகளாவிய கடல் சுழற்சி முறைகளை கடுமையாக சீர்குலைக்கும் என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.

ஐசி3 போலார் ரிசர்ச் ஹப்பில் இருந்து முகமது ஈஸாட் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், நேச்சர் கம்யூனிகேஷன்ஷில் வெளியிடப்பட்டது.

ஆர்க்டிக் கடல் பனி நார்டிக் கடல்களில் உருகுவதால் நன்னீர் வரத்து அதிகரித்தது. இது வரலாற்று ரீதியாக கடல் சுழற்சியை பாதித்துள்ளது.
இந்த நிகழ்வு வடக்கு ஐரோப்பா முழுவதும் குறிப்பிடத்தக்க வெப்பநிலை வீழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கிரீன்லாந்து மற்றும் நார்வே இடையே அமைந்துள்ள நார்டிக் கடல்கள், கடல் வெப்பப் போக்குவரத்துக்கு இன்றியமையாதவை மற்றும் உலகளாவிய வானிலை முறைகளை வெகு தொலைவில் பாதிக்கின்றன.

You May Also Like

More From Author