கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில் கடந்த 22ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
இந்நிலையில், விழாவில் முக்கிய நிகழ்வான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயருடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளினார். தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என போற்றப்படும் சாரங்கபாணி கோயில் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
110 அடி உயரமும், 30 அடி அகலமும், 500 டன் எடையும் கொண்ட பிரம்மாண்ட தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
