இடி, மின்னலுடன் கனமழை! சேலம், நீலகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

Estimated read time 0 min read

சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூன் 20) தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நாளை (ஜூன் 21) தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரும். குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கவும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author