மேற்காசிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் கடுமையான போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், வாஷிங்டன் வழங்கியுள்ள புதிய அமைதி ஒப்பந்தத்தை ஈரான் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தங்களின் சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், ஈரானுக்கான கால அவகாசம் தற்பொழுது அதிவேகமாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானில் அழிவைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை
