அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் வரலாறு காணாத வகையில் 97 என்ற மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது.
இந்த அதிரடி வீழ்ச்சியிலிருந்து ரூபாயின் மதிப்பை மீட்டெடுத்துப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக, ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்துவது, கூடுதல் கரன்சி ஸ்வாப் ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து டாலர்களை ஈர்ப்பது உள்ளிட்ட சாத்தியமான அனைத்து அவசர உத்திகளையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தற்பொழுது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
சரிவில் இந்திய ரூபாய்: வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை
