இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பதவியேற்றபின் பேசிய அவர், சவால்கள் நிறைந்த தற்போதைய சூழலில், நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார நலன்களையும் காப்பதே தனது முதல் முன்னுரிமை என்றார். மேலும், உள்நாட்டுத் தயாரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கடற்படை பலப்படுத்தப்படும் என்றும், வீரர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, ஓய்வுபெற்ற முன்னாள் தளபதி தினேஷ் திரிபாதியின் சிறந்த சேவைக்கு அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
