மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் – ஈரான் இடையே ஏவுகணைப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான அரசுமுறை உறவிலும் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது.
“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களை நடத்தினால், சர்வதேச அரங்கில் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆக்ஸியோஸ் ஊடகத்திற்கு டிரம்ப் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
‘தனித்து விடப்படுவாய் பிபி’: நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்
