ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Estimated read time 1 min read

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சானாபோரா, சையத்போரா, சையதாபோரா பாலா, அம்ஷிபோரா உள்ளிட்ட பகுதிகளில், ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

You May Also Like

More From Author