நாட்டு பிரிவினை தடுப்பு சட்டமும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டை முன்னேற்றும் சட்டமும் குறித்து லெய்ஜிங்தெ அண்மையில் தெரிவித்த அவதூறுகளுக்குச் சீன அரசவைத் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், லெய்ஜிங்தெ வட்டாரம் என்ன சொன்னாலும் செய்தாலும் இரு கரையுறவின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது. தாய்நாடு இறுதியில் ஒருமைப்படுத்தப்படும். ஒருமைப்படும் உறுதி என்ற வரலாற்றுப் போக்கு தடுக்கப்பட முடியாது என்றார்.
