ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

Estimated read time 1 min read

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனான ஜப்பானின் அகனி யமாகுசியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-17, 21-17 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்றுள்ள முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author