தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை சேரன் தலைமையிலான அணி கைப்பற்றியது.
சென்னை வடபழனியில் 2026–2029 காலகட்டத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில், இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணியும், இயக்குநர் குகநாதன் தலைமையிலான ‘திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ்’ அணியும் போட்டியிட்டன.
இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேரன் 124 வாக்குகள் வித்தியாசத்தில் குகநாதனை வீழ்த்தி வெற்றி பெற்றார். மேலும், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில சேரன் அணியைச் சேர்ந்த சமுத்திரக்கனி மற்றும் சினேகன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோல, பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் வெற்றி பெற்றார்.
