சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
பரந்தூர் விமான நிலைய திட்டம்: இடத்தை மாற்ற தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை
