மண்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கியிலொங் நுழைவாயிலை சென்றடைந்த மீட்புதவியாளர்கள்

Estimated read time 0 min read

சீனாவை ஒட்டியமைந்துள்ள நேபாளப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் நாள் காலை சுமார் 10:30மணியளவில், மண்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, சீனாவின் சிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிகசே நகரில் உள்ள கியிலோங் நுழைவாயில் பகுதியில் கடும் உயிரிழப்பு ஏற்பட்டது. 28ஆம் நாள் முதல், சீனாவின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள், தரை, நீர் மற்றும் வான் ஆகிய வழிகளாக, பேரிடரின் மையப் பகுதிக்குள் முன்னேறி வருகின்றன. தற்போது வரை, முதலாவது தொகுதி மீட்புதவியாளர்கள் கியிலோங் நுழைவாயில் அமைந்துள்ள மையப் பகுதியைச் சென்றடைந்துள்ளனர். மேலும், அவசர மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் தீவிரமாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You May Also Like

More From Author