நேபாளத்துக்கு 4ஆவது தொகுதி நிவாரணப் பொருட்களை அனுப்பியது: சீனா

சீனாவின் 4ஆவது தொகுதி மீட்புதவிப் போக்குவரத்து, விளக்குகள் முதலிய பொருட்கள் உள்ளிட்ட பேரிடர் நிவாரணப் பொருட்கள் செப்டம்பர் 8ஆம் நாள் காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் தெரிவித்தார். சீன கிராமப்புற வளர்ச்சி நிதியம், நேபாளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, தற்காலிக குடியேற்றங்களை கட்டியமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவச் சேவையை வழங்கியுள்ளது. தவிரவும் நேபாளத்திலுள்ள சீன மூலதனத் தொழில் நிறுவனங்கள் அண்மையில், நேபாளத்துக்கு முதல் தொகுப்பு உதவித் தொகையை வழங்கியுள்ளது. பேரிடர் காலத்தைச் சமாளிக்க, சீனா நேபாளத்துடன் இணைந்துருவருக்கொருவர் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து, சிரமங்களைக் களைய முனைவோம் என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author