சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் சீனாவின் ஹெய்லூங்ஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது கூறுகையில், நாட்டின் வளர்ச்சி நிலைமையிலுள்ள நெடுநோக்கு திசையைத் தெரிந்துகொண்டு, உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற முதன்மை கடமையை கடைப்பிடித்து, வடக்கிழக்கு பகுதியில் வளர்ச்சிக்கான கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை மற்றும் திட்டங்களைச் செவ்வனே செயல்படுத்த வேண்டும் என்றும், நாட்டின் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சூழலியல் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு, தொழில் துறை பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் கடப்பாட்டினை நிறைவேற்றி, இம்மாநிலத்தின் உயர்தர வளர்ச்சிக்கான புதிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
