சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Category: சீனா
CMG News
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வின் எழுச்சி பற்றிய விளக்கம்
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வின் எழுச்சியை விளக்கிக் கூறும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி [மேலும்…]
மலேசியாவில் நடக்கவுள்ள சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வு
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பின் கலந்தாய்வின்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன அரசவையின் துணைத் [மேலும்…]
சீனாவில் உயர் தர கல்வி அமைப்புமுறை கட்டுமான முன்னேற்றம்
14ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் போது, சீனாவின் வல்லரசு கட்டுமானத்துக்கு அதிகமான திறமைசாலிகளை உருவாக்கும் வகையில் சீனாவில் மிகப் பெரிய அளவிலான உயர் தரக் கல்வி [மேலும்…]
சீனாவின் அனுபவங்கள் உலகிற்குப் பங்கு
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை செயலாளர் ஜோர்ச்கியேவா அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்து, சீனாவின் வளர்ச்சிக்கு அடையாளம் காட்டுவது, [மேலும்…]
மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் துவக்கம்
மென்குங் ஆற்றில் 158ஆவது சீனா-லாவோஸ்-மியான்மார்-தாய்லாந்து கூட்டு ரோந்து மற்றும் சட்ட அமலாக்கம் அக்டோபர் 21ஆம் நாள் காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பு, [மேலும்…]
சீனாவின் அடுத்த தலைமுறை அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தில் புதிய சாதனை
சி.ஆர்.450 எனப்படும் சீனாவின் அடுத்த தலைமுறைக்கான அதிவேக ரயில் சமீபத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. செயல்பாட்டுச் சோதனையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் [மேலும்…]
சீனாவில் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனாவின் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம், இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில் உள் நாட்டு சுற்றுலாச் சந்தை அறிக்கையை வெளியிட்டது. இதில், இவ்வாண்டின் முதல் [மேலும்…]
சீனாவில் அன்னிய நுகர்வு விறுவிறுப்பு
138வது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி சீனாவின் குவாங் ச்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் நாள் வரை, 1.57 இலட்சம் [மேலும்…]
சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலம்!
சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலமாக நடைபெற்றது. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் நகரில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டுப்புற கலை [மேலும்…]
ஐ.நாவின் முக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டும்:சீனா
தற்போதைய சிக்கலான சர்வதேச சூழ்நிலைமையில், ஐ.நாவை முக்கியமாகக் கொண்ட சர்வதேச அமைப்புமுறையை சர்வதேசச் சமூகம் பேணிக்காக்க வேண்டும். சர்வதேச சட்டம் என்ற அடிப்படையிலான சர்வதேச [மேலும்…]
