“அது மட்டுமே குறி” இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை…. தவெக கட்சி அறிவிப்பு…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் புஸ்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு.

ஆனால் அதற்கு முன்னதாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை எனவும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author