பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு!

Estimated read time 0 min read

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது.

இதனால் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு ஆயிரத்து 300 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில், தற்போது 94 அடிவரை தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக அணையில் இருந்து மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. கடந்த சில வாரங்களாக ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author