விக்கிரவாண்டி தொகுதிக்கு பொது விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

Estimated read time 1 min read

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் ஜூலை 10-ல் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தனியார் நிறுவனங்களும் அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author