விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! – 11 மணி நிலவரப்படி 30% வாக்குகள் பதிவு

Estimated read time 0 min read

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 11 மணி நிலவரப்படி 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி காலமானார். இதனையடுத்து அங்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்காக 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் இணைய வழியில் கண்காணிக்கப்படுகின்றன. இதற்காக தலைமை செயலகத்தில் கட்டுபபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 11 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 29 புள்ளி 97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது குடும்பத்தினருடன் அன்னியூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42வது வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதேபோல், பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author