அரபிக்கடலின் வெப்பமயமாதல், ஆழமான மேக அமைப்புகளை உருவாக்குகிறது.
இது குறுகிய காலத்தில் கேரளாவில் மிக அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கிறது மற்றும் நிலச்சரிவுக்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது என்று மூத்த காலநிலை விஞ்ஞானி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டது, குறைந்தது 143 பேர் இறந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவிற்கும், அரபிக்கடலின் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு உள்ளது
