பாலத்தின் கீழ் தூங்கி கொள்ளிடம் ஆற்றில் சிக்கியவர் மீட்பு!

Estimated read time 1 min read

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது தெரியாமல், பாலத்தின் கீழே உறங்கச் சென்று நீரில் சிக்கியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் சசிகுமார் என்ற முதியவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், அவர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி அவரை பத்திரமாக மீட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author