லடாக் 2019இல் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை முதல்முறையாக அங்கு சோதனை நடத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை ‘எமோய்லண்ட் காயின்’ என்ற கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தனர். ஆனால், அவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை.
இந்த பணத்தை மோசடியாளர்கள் ஜம்முவில் அசையா சொத்துக்களை வாங்குவதற்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின் கீழ் ஏஆர் மீர் என்ற நிறுவனத்தால் நடத்தப்படும் போலி கிரிப்டோகரன்சி வணிகம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகவலின்படி, லே, ஜம்மு மற்றும் சோனிபட் ஆகிய இடங்களில் இந்த வழக்கு தொடர்பான 6 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
லடாக்கில் முதல் முறையாக களமிறங்கிய அமலாக்கத்துறை; பின்னணி என்ன?
