மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்  

Estimated read time 0 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை காலமானார்.
அவருக்கு வயது 80. இவருக்கு மீரா என்ற மனைவியும், சுசேதன் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஆண்டு, அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு உடல்நலம் தேறி மீண்டு வந்தார்.
இந்நிலையில், மீண்டும் உடல்நலம் சரியில்லாமல் போன நிலையில், வியாழக்கிழமை தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலேயே காலமானார்.

Please follow and like us:

You May Also Like

More From Author