வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..

Estimated read time 0 min read

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதன்படி பட்ஜெட்டுக்கு பிறகான 5 நாட்கள் தங்கம் மளமளவென சவரனுக்கு ரூ.5ஆயிரம் வரை சரிந்தது. ஆனால் தொடர்ந்து சரியும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

ஆம், அதன்பின்னரும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,885க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.55,080க்கு விற்பனையானது. இதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 55,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை முன்னதாக கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,920க்கும், ஒரு சவரன் ரூ.55,360க்கும் விற்பனை செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஒரு சவரன் ரூ.55,680 என்கிற வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author