மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை  

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்டம்தோறும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் முறைகேடு நடந்திருப்பதை தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டுபிடித்தது.
இதேபோல், திருவள்ளூரில் உள்ள ஒரு அரசு பள்ளியிலும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டி மோசடி நடைபெற்றுள்ளது.
இந்த மோசடிகள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிப் பொருட்களை கூடுதலாக பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோசடிகளை களைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை தீவிர ஆலோசனை நடத்தியது.

You May Also Like

More From Author