உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு  

Estimated read time 0 min read

ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளில் உலகளவில் மூன்று பேரில் ஒருவர் குறுகிய பார்வை அல்லது கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தப் போக்கு அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டப்பார்வை ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார கவலையாக உருவாகி வருகிறது. 2050ஆம் ஆண்டளவில் இது மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயால் வீட்டிற்குள் முடங்கிய குழந்தைகள் செல்போன் பார்ப்பது அதிகரிப்பு மற்றும் லாக்டவுன்கள் காரணமாக வெளிப்புற செயல்பாடு குறைக்கப்பட்டது சிக்கலை மோசமாக்கியுள்ளது.

கிட்டப்பார்வைக்கு அதிக பாதிப்பு ஆசியாவில் உள்ளது. அதிலும், ஜப்பானில் அதிகபட்சமாக 85% குழந்தைகளும் தென் கொரியாவில் 73% குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா மற்றும் ரஷ்யாவில் 40% க்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author