நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 192 பேர் பலியான சோகம்  

நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது.
மேலும், 30 பேரைக் காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தி, நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தியது.
தொடர் மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் குறைந்தது 192 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவில் நாடு முழுவதும் மேலும் 94 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளனர்.
தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரிஷிராம் திவாரி தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author