சீன-இத்தாலி மானுடவியல் பரிமாற்ற நிகழ்வு

Estimated read time 1 min read

 

சீனாவுக்கும் இத்தாலிக்கும் இடையே பன்முகங்களிலும் நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்டதன் 20ஆம் ஆண்டு நிறைவு என்ற மானுடவியல் பரிமாற்ற நிகழ்வை சீன ஊடகக் குழுமம் அக்டோபர் 14ஆம் நாள் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்றது.

சீன மற்றும் இத்தாலி பாலம் உள்ளிட்ட இரு நாட்டு ஊடகங்கள் கூட்டாக தயாரித்த தொலைகாட்சி மற்றும் இணைய நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

மேலும், மிலன் இக்னோமி எனும் செய்தித்தாள், இத்தாலியின் டெலிஸ்பேசியோ(Telespazio)நிறுவனம் முதலியவையுடன் சீன ஊடகக் குழுமம் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் என்று செய்தி வெளியிடப்பட்டது.

இத்தாலி சுற்றுலா துறை அமைச்சர் சாந்தஞ்செ அம்மையார் உரைநிகழ்த்தியபோது, இரு நாட்டு மக்களுக்கிடையேயான பரிமாற்றம், பொருளாதார வளர்ச்சி, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பாரம்பரிய நட்பை முன்னேற்றுவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும், 2024ஆம் ஆண்டு இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவாகும். இதை முன்னிட்டு, இத்தாலி சீனாவுடனான கூட்டாளியுறவை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு நாடுகளுக்கும், பிரதேசத்துக்கும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் பொருந்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

சீன ஊடகக் குழுமத்தின் துணை இயக்குநர் சிங்போ அம்மையார் கூறுகையில், சீனாவுக்கும் இத்தாலிக்கும் இடையே மானுடவியல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிப்பதில் சீன ஊடகக் குழுமம் ஈடுபட்டு வருகின்றது. சிறந்த ஊடக நிகழ்ச்சிகளின் தயாரிப்பு, ஊடக தொழில் நுட்பத்தின் புத்தாக்கம், மக்கள் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் மேலும் ஒத்துழைப்பு மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author