தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை…!! 

Estimated read time 1 min read

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புதுச்சேரியிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இரு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வருகிற 24-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானமேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author