ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ்; பாராட்டுகளை பெறும் கோவை AI ஸ்டார்ட் அப்  

Estimated read time 1 min read

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Kovai.co என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 14.5 கோடி ரூபாய் போனஸ் வழங்கியுள்ளது.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் துவக்கினார்.
தற்போது இந்த நிறுவனத்தில் 140 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
கோவை.கோ என்ற நிறுவனம் கோயம்புத்தூர் நகரத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
இந்த ஸ்டார்ட் அப் வணிகத்திலிருந்து வணிகத்திற்கான மென்பொருள் தீர்வுகளை (SaaS) வழங்குகிறது.
இந்த நிறுவனம் பிபிசி, போயிங் மற்றும் ஷெல் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அதன் சேவைகளை வழங்கி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author