ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, ஐபிஎல் 2025க்கான புதிய கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமித்துள்ளது.
ஏலத்திற்கு முன்னதாக அணியை விட்டு வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏலத்தில் கேகேஆரால் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இரண்டு வருட காலம் இருந்த பிறகு, அஜிங்க்யா ரஹானே இந்த ஆண்டு மீண்டும் கேகேஆருக்குத் திரும்புகிறார்.
சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு முன்பு, 2022 இல் அவர் கேகேஆருக்காக விளையாடி, ஏழு போட்டிகளில் 133 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமனம்
