சீன இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்க-சீன பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆதிக்க அதிகார அரசியலை எதிர்ப்பதில் சீனாவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அந்நாட்டு தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்திற்குப் பிறகு பேசிய வாங், டிராகனும் யானையும் இணைந்து செயல்பட வேண்டும் என, இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு குளோபல் சவுத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச உறவுகளை ஜனநாயகப்படுத்தும் என்று கூறினார்.
அமெரிக்க வர்த்தக போரை இணைந்து எதிர்க்க இந்தியாவிடம் சீனா கோரிக்கை
