பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத போராளிகள் செவ்வாய்க்கிழமை சுமார் 400 பயணிகளுடன் ஒரு பயணிகள் ரயிலைத் தாக்கினர்.
இதில் ரயில் ஓட்டுநர் காயமடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயிலை தாங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ரயில் மீது தாக்குதல், 100க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தீவிரவாதக்குழு
