புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

Estimated read time 1 min read

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கம் வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,310க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்பனையாகிறது.

அதேநேரம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.114க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,14,000க்கும் விற்பனையாகிறது.

மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.9,065-க்கும், ஒரு சவரன் ரூ.72,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author