சட்டப்பிரிவு 370 ரத்தால் காஷ்மீருக்கு வளர்ச்சி; காங்கிரசின் சல்மான் குர்ஷித் பாராட்டு  

Estimated read time 0 min read

இந்திய நாடாளுமன்றக் குழுவின் அனைத்துக் கட்சி உறுப்பினராக இந்தோனேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரிவினைவாத பதட்டங்கள் தீர்ந்து, பிராந்தியத்தில் செழிப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் உரையாற்றிய சல்மான் குர்ஷித், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 தனிமையின் தோற்றத்தை உருவாக்கியதாகவும், 2019 இல் அது நீக்கப்பட்டதன் மூலம் அது சரிசெய்யப்பட்டதாகவும் கூறினார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு, ஆகஸ்ட் 2019 இல் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author