முழு உலகமும், பூமி கிராமம் என்று அழைக்கிறோம். அதிலுள்ள கிராமவாசிகள் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பன்னாட்டுப் பிரச்சினைகள் சில, தனி நாட்டால் தீர்க்கப்பட முடியாது.
இந்நிலையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2022ம் ஆண்டில், உலக பாதுகாப்பு முன்மொழிவை வழங்கினார். ஒட்டுமொத்த பாதுகாப்பு கருத்தில் ஊன்றி நிற்பது, பொது பாதுகாப்பு கோட்பாட்டைப் பின்பற்றுவது, ஒத்துழைப்பு தன்மை வாய்ந்த பாதுகாப்பு கருத்துக்கு ஆதரவளிப்பது, தொடரவல்ல பாதுகாப்பு கருத்துக்கு ஆதரவளிப்பது ஆகிய 4 துறைகளின் அம்சங்கள், இம்முன்மொழிவின் மைய பகுதியாகும்.
பாதுகாப்பு என்பது, தன்னை மட்டும் பாதுகாப்பது அல்ல, கையோடு கைகோர்த்து முன்னேறுவது ஆகும். பாதுகாப்பு என்பது, வெற்றியாளர் அனைத்து நலன்களையும் பெறுவது அல்ல, கூட்டு வெற்றி பெறுவது ஆகும். ஷிச்சின்பிங்கின் இம்முன்மொழிவு, பதற்றமான உலகிற்கு மிக தேவையான பொது உற்பத்தி பொருளான நம்பிக்கையை வழங்கியுள்ளது என்று சர்வதேச விமர்சகர்கள் தெரிவித்தனர்.