ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இளம் வீரரான வைபவ், வெறும் 37 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து, 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்களை விளாசி, டி20 மற்றும் ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அவரது ஆட்டம் ஐபிஎல்லில் ஒரு இந்தியரின் வேகமான சதத்திற்கான புதிய சாதனையையும், 2013 இல் கிறிஸ் கெயிலின் 30 பந்துகளில் சதம் அடித்ததற்குப் பிறகு ஒட்டுமொத்தமாக இரண்டாவது வேகமான சதத்திற்கான சாதனையையும் படைத்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவாரா வைபவ் சூர்யவன்ஷி
