இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

Estimated read time 0 min read

இந்தியா பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தரசில் மற்றும் ஜலந்தர் மாவட்டங்களுக்கு அருகே உள்ள இடத்தில் சீனா தயாரித்த சிறிய ரக ஏவுகணை பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் தான் ஆயுதங்கள் வாங்குகிறது என்பதாலும், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவுவதாலும் பாகிஸ்தான் தான் இந்த ஏவுகணையை இந்தியா மீது வீசி இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கப்டுகின்றன.

இந்த ஏவுகணை தாக்குதலில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏவுகணை நேற்று இரவே வானில் கண்டறியப்பட்டு அது இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டது என்றும் சில தகவல்கள் உலா வருகின்றன. இந்திய ராணுவம் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author