சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தின் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டம் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் உரைநிகழ்த்தினார்.
சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து, 2015ஆம் ஆண்டில், சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொங்கினோம். இதன் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தில் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ஷிச்சின்பிங்,
கடந்த 10 ஆண்டுகளில், இரு தரப்புகளின் முயற்சிகளுடன் சேர்ந்து, இம்மன்றம் பல சாதனைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது என்றும், இரு தரப்பும் கையோடு கை கோர்த்து ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை விரிவாக்கி, ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து, இன்னல்களைச் சமாளித்து, ஒன்றுபட்டு ஒத்துழைத்து, தொடர்புடைய பொறுப்புகளுக்கு ஏற்ப, மனித குலத்தின் பொது சமூகத்தை கட்டியமைத்துளோம் என்றார் அவர்.