சிங்கப்பூரில் நடந்த ஷாங்க்ரி-லா உரையாடலின் போது, தைவானுக்கு சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
மேலும், மோதலைத் தடுக்க ஆசிய நாடுகள் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கவும் அமெரிக்காவுடன் மூலோபாய ராணுவ உறவுகளை விரிவுபடுத்தவும் வலியுறுத்தினார்.
உயர்மட்ட பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பிராந்தியத் தலைவர்களிடம் உரையாற்றிய ஹெக்செத், அமெரிக்கா சீனாவை ஆதிக்கம் செலுத்தவோ அல்லது கழுத்தை நெரிக்கவோ முயலவில்லை என்றாலும், ஆசியாவில் தனது இருப்பைப் பாதுகாப்பதற்கும் தன்னுடைய நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.
2027க்குள் தைவானை சீனா தாக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை
