Breaking: தமிழகத்தில் இனி இந்த 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் தற்போது இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. அதாவது மதுரை மற்றும் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தரமான சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லை என தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இனி அந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author